என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- கணித ஆசிரியர் போக்சோவில் கைது
Byமாலை மலர்17 Sep 2021 10:14 AM GMT (Updated: 17 Sep 2021 10:14 AM GMT)
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 57). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
மாணவிகளின் புகாரை தொடர்ந்து பள்ளியின் சார்பில் ஆசிரியர் சேகரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் கணித ஆசிரியர் சேகரை போலீசார் நேற்று ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கைதான ஆசிரியர் சேகர் கடந்த 2004-ம் ஆண்டு பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 57). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
மாணவிகளின் புகாரை தொடர்ந்து பள்ளியின் சார்பில் ஆசிரியர் சேகரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் கணித ஆசிரியர் சேகரை போலீசார் நேற்று ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கைதான ஆசிரியர் சேகர் கடந்த 2004-ம் ஆண்டு பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X