search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
    X
    முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

    முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை முதல் நடத்திய சோதனை நிறைவடைந்தது.
    ஜோலார்ப்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

    தொடர்ந்து 12 மணி நேரத்துக்கும் மேல் நடத்திய சோதனை இரவில் நிறைவடைந்தது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:

    அமைச்சர் வீடு

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை.

    உள்ளாட்சி தேர்த்லை மனதில் வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

    Next Story
    ×