என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வி.கே.புரம் அருகே மகன் காதல் திருமணம் செய்ததால் தாய் தற்கொலை
Byமாலை மலர்16 Sep 2021 11:29 AM GMT (Updated: 16 Sep 2021 11:29 AM GMT)
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே மகன் காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
சென்னை அருகே உள்ள மாங்காடு பகுதியை சேர்ந்தவர் லட்சப்பா. இவரது மனைவி பிரேமா (வயது 55).
இவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாங்காட்டில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு, வி.கே.புரம் அருகே உள்ள பொத்தையடிக்கு குடிபெயர்ந்தனர்.
இங்கு ஒரு வீட்டில் சமையல் வேலை செய்து இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பிரேமா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் இவர்களது மகன் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக சென்று விட்டதாகவும், இதனால் மனமுடைந்து லட்சப்பா, பிரேமா ஆகியோர் சென்னையில் இருந்து இங்கு குடிவந்தது தெரியவந்தது.
இங்கு வந்த பிறகும் பிரேமா மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை அருகே உள்ள மாங்காடு பகுதியை சேர்ந்தவர் லட்சப்பா. இவரது மனைவி பிரேமா (வயது 55).
இவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாங்காட்டில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு, வி.கே.புரம் அருகே உள்ள பொத்தையடிக்கு குடிபெயர்ந்தனர்.
இங்கு ஒரு வீட்டில் சமையல் வேலை செய்து இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பிரேமா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் இவர்களது மகன் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக சென்று விட்டதாகவும், இதனால் மனமுடைந்து லட்சப்பா, பிரேமா ஆகியோர் சென்னையில் இருந்து இங்கு குடிவந்தது தெரியவந்தது.
இங்கு வந்த பிறகும் பிரேமா மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X