search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை தற்கொலை"

    கல்லிடைக்குறிச்சியில் சரியாக தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 59), விவசாயி. கடந்த 2 வருடமாக இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சரியாக தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்தார். இதில் மனம் உடைந்த செல்லப்பா வி‌ஷம் குடித்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கல்லிடைகுறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆழ்வார்குறிச்சி அருகே செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழஆம்பூரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் செல்வி (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி அடிக்கடி செல்போனில் விளையாடி வந்ததாகவும், இதனை பெற்றோர் கண்டித்ததாகவும் தெரிகிறது.

    இதில் மனம் உடைந்த செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லையில் கடன் பிரச்சனையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    டவுன் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 42), சலவை தொழிலாளி.

    இவருக்கு அதிகளவு கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அவர் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பணகுடி அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பணகுடி:

    பணகுடி அருகே உள்ள தர்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சுகுணா (வயது17). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவி சுகுணா வீட்டில் இருந்தார். அப்போது அவர் யாருடனும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் வீட்டில் தூங்க சென்றதும் சுகுணா மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார்.

    சத்தம் கேட்டு பெற்றோர்கள் விரைந்து வந்து சுகுணாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுகுணா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகுணாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 56). இவர் சென்னை அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சண்முகவேல் பின்னர் மீண்டும் திரும்பவில்லை. அக்கம்-பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ராதாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை ராதாபுரம் அருகே உள்ள பாழடைந்த கோழிப்பண்ணையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதியினர் போலீசில் புகார் செய்தனர்.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பினுகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் சண்முகவேல் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சண்முகவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சண்முகவேலு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
    ×