search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பணகுடி அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    பணகுடி அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பணகுடி:

    பணகுடி அருகே உள்ள தர்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சுகுணா (வயது17). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவி சுகுணா வீட்டில் இருந்தார். அப்போது அவர் யாருடனும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் வீட்டில் தூங்க சென்றதும் சுகுணா மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார்.

    சத்தம் கேட்டு பெற்றோர்கள் விரைந்து வந்து சுகுணாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுகுணா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகுணாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×