என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tirunelveli suicide
நீங்கள் தேடியது "Tirunelveli suicide"
கல்லிடைக்குறிச்சியில் சரியாக தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
கல்லிடைக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 59), விவசாயி. கடந்த 2 வருடமாக இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சரியாக தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்தார். இதில் மனம் உடைந்த செல்லப்பா விஷம் குடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கல்லிடைகுறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லிடைக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 59), விவசாயி. கடந்த 2 வருடமாக இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சரியாக தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்தார். இதில் மனம் உடைந்த செல்லப்பா விஷம் குடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கல்லிடைகுறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆழ்வார்குறிச்சி அருகே செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழஆம்பூரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் செல்வி (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி அடிக்கடி செல்போனில் விளையாடி வந்ததாகவும், இதனை பெற்றோர் கண்டித்ததாகவும் தெரிகிறது.
இதில் மனம் உடைந்த செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழஆம்பூரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் செல்வி (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி அடிக்கடி செல்போனில் விளையாடி வந்ததாகவும், இதனை பெற்றோர் கண்டித்ததாகவும் தெரிகிறது.
இதில் மனம் உடைந்த செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லையில் கடன் பிரச்சனையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
டவுன் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 42), சலவை தொழிலாளி.
இவருக்கு அதிகளவு கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அவர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டவுன் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 42), சலவை தொழிலாளி.
இவருக்கு அதிகளவு கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அவர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணகுடி அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணகுடி:
பணகுடி அருகே உள்ள தர்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சுகுணா (வயது17). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவி சுகுணா வீட்டில் இருந்தார். அப்போது அவர் யாருடனும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் வீட்டில் தூங்க சென்றதும் சுகுணா மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார்.
சத்தம் கேட்டு பெற்றோர்கள் விரைந்து வந்து சுகுணாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுகுணா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகுணாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணகுடி அருகே உள்ள தர்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சுகுணா (வயது17). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவி சுகுணா வீட்டில் இருந்தார். அப்போது அவர் யாருடனும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் வீட்டில் தூங்க சென்றதும் சுகுணா மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார்.
சத்தம் கேட்டு பெற்றோர்கள் விரைந்து வந்து சுகுணாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுகுணா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகுணாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X