என் மலர்
நீங்கள் தேடியது "Nellai suicide"
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 56). இவர் சென்னை அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சண்முகவேல் பின்னர் மீண்டும் திரும்பவில்லை. அக்கம்-பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ராதாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை ராதாபுரம் அருகே உள்ள பாழடைந்த கோழிப்பண்ணையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதியினர் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பினுகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் சண்முகவேல் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சண்முகவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சண்முகவேலு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 56). இவர் சென்னை அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சண்முகவேல் பின்னர் மீண்டும் திரும்பவில்லை. அக்கம்-பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ராதாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை ராதாபுரம் அருகே உள்ள பாழடைந்த கோழிப்பண்ணையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதியினர் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பினுகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் சண்முகவேல் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சண்முகவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சண்முகவேலு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.






