என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காதலி வீட்டு முன்பு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
கவுண்டம்பாளையம்:
கோவை துடியலூர் பன்னிமடை அருகே உள்ள தாளியூரை சேர்ந்தவர் இவரது மகன் சவுந்திரபாண்டியன் (வயது 27).
கடந்த சில வருடங்களுக்கு முன்பு சவுந்திரபாண்டியனுக்கு கதிர்நாயக்கன்பாளையத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. ஒருவரை ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் சவுந்திரபாண்டியன் சிங்கப்பூருக்கு சென்று வெல்டிங் வேலை பார்த்தார். அங்கிருந்தபடியே அவர், காதலியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார். அப்போது 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் இளம்பெண் தனது காதலருடன் பேசுவதை தவிர்த்தார். இதன்காரணமாக மனவேதனை அடைந்த சவுந்திரபாண்டியன் சிங்கப்பூரில் வைத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அங்கு இருந்தவர்கள் காப்பாற்றினர்.
அதன் பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சவுந்திரபாண்டியன் கோவைக்கு திரும்பினார். இங்கு ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். ஆனால் அவர் தனது காதலியை மறக்க முடியாமல் தவித்தார்.
சம்பவத்தன்று தனது காதலி வீட்டிற்கு அவர் சென்றார். தனது காதலியை வெளியே வருமாறு அழைத்தார். ஆனால் இளம்பெண் வெளியே வர மறுத்து விட்டார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சவுந்திரபாண்டியன் தான் மறைத்து வைத்து இருந்த விஷத்தை காதலி வீட்டு முன்பு வைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சவுந்திரபாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சவுந்திரபாண்டியன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்