search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காதல் திருமணம் விவகாரத்தில் வாலிபரின் உறவினர்களை கடத்தி சென்று சிறுநீர் குடிக்க சொல்லி சித்ரவதை

    காதல் திருமண விவகாரத்தில் வாலிபரின் உறவினர்களை கடத்தி சென்று சிறுநீர் குடிக்க சொல்லி துன்புறுத்திய சம்பவம் பாலக்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பன்னிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் ரமேஷ் (வயது 19). டிப்ளமோ படித்துள்ளார்.

    இந்த நிலையில் ரமேஷ், அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த 21 வயது பட்டதாரி இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில், கடந்த 10-ந் தேதி காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்து கொள்ள ஊரை விட்டு ஓடி விட்டனர். இது இளம்பெண்ணின் பெற்றோருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் மாரண்ட அள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இளம்பெண்ணின் உறவினர்கள் சிலர், ரமேசின் உறவினர்கள் 3 பேரை கடத்தி சென்றனர். பின்னர் எல்லப்பன் பாறை மாந்தோப்பிற்கு கடத்தி சென்று அங்கு வைத்து 3 பேரையும்அடித்து உதைத்துள்ளனர். மேலும் அவர்களை மது குடிக்க வைத்தும், முகத்தில் சிறுநீர் கழித்தும், செருப்பாலும் அடித்துள்ளனர். அப்போது ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

    மேலும் சிறுநீர் குடிக்க சொல்லி 2 பேரையும் அந்த கும்பல் அடித்து உதைத்ததால் அவர்கள் இருவரின் கூச்சல் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர். காயமடைந்த 2 பேரையும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள்சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

    இது குறித்து ரமேஷின் உறவினர்கள் பாலக்கோடு டி.எஸ்.பி. தினகரனிடம் புகார் செய்தனர். அதில் தங்களை தாக்கியவர்கள் மீது எஸ்.சி., எஸ்டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் மேலும் தங்களது சமூக மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    இந்த புகார் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

    காதல் திருமண விவகாரத்தில் வாலிபரின் உறவினர்களை கடத்தி சென்று சிறுநீர் குடிக்க சொல்லி துன்புறுத்திய சம்பவம் பாலக்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×