என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது- தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Byமாலை மலர்13 Sep 2021 10:31 AM GMT (Updated: 13 Sep 2021 12:02 PM GMT)
சட்டசபை இன்றைய கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு பெற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் மீதான விவாதம் 2 நாட்கள் நடந்தன. அதன்பிறகு துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்தது. இந்த நிலையில் இன்று போலீஸ் மானிய கோரிக்கைக்கான பதில் உரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்தினார். புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
இன்றைய கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு பெற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா உள்பட மொத்தம் 20 சட்ட மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்...நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேறியது -பாஜக வெளிநடப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X