என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் மளிகைக்கடைக்காரர் வீட்டில் 10 பவுன் நகை- ரூ.3 லட்சம் கொள்ளை
Byமாலை மலர்11 Sep 2021 8:31 AM GMT (Updated: 11 Sep 2021 8:31 AM GMT)
கோவையில் இன்று அதிகாலையில் மளிகைக்கடைக்காரர் வீட்டில் 10 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.
கோவை:
கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் ரத்தினபாண்டியன் (58).
இவர் தனது வீட்டருகே மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 8-ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் உடன்குடிக்கு உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டின் கேட்டை ஏறி குதித்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கதவு தாழ்ப்பாழின் ஸ்குருவை கழட்டி கதவை திறந்து வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.
பின்னர் உள்ளே இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், 10 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ரத்தினவேல் பாண்டியனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். பின்னர் கோவையில் வசிக்கும் அவரது சகோதரர் பகவதி பாண்டியன் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அவர்கள் கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதனையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் ரத்தினபாண்டியன் (58).
இவர் தனது வீட்டருகே மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 8-ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் உடன்குடிக்கு உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டின் கேட்டை ஏறி குதித்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கதவு தாழ்ப்பாழின் ஸ்குருவை கழட்டி கதவை திறந்து வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.
பின்னர் உள்ளே இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், 10 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ரத்தினவேல் பாண்டியனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். பின்னர் கோவையில் வசிக்கும் அவரது சகோதரர் பகவதி பாண்டியன் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அவர்கள் கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதனையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X