search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நானே நேரில் கண்காணிக்க உள்ளேன்- மு.க.ஸ்டாலின் அதிரடி எச்சரிக்கை

    சட்டசபையில் அறிவித்துள்ள திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.

    அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    அப்போது மு.க.ஸ்டாலின் அதிரடி எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளோம். சட்டசபையில் அறிவித்துள்ள திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்.

    இந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்று அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நானே நேரடியாக கண்காணிக்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    Next Story
    ×