என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவெண்ணைநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி டாஸ்மாக் கடை ஊழியர் பலி
Byமாலை மலர்11 Sep 2021 5:06 AM GMT (Updated: 11 Sep 2021 5:06 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த டாஸ்மாக் கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சரவணப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் ஆமூர் குப்பம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் டாஸ்மாக் கடையில் வேலை முடிந்த பிறகு குமார் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டுக்கு வந்த குமார் தொட்டியில் தண்ணீர் இல்லாததால் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக மின் மோட்டாரின் ஸ்வீட்சை ஆன் செய்தார்.
அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட குமார் பலத்த காயம் அடைந்தார். குமாரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சரவணப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் ஆமூர் குப்பம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் டாஸ்மாக் கடையில் வேலை முடிந்த பிறகு குமார் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டுக்கு வந்த குமார் தொட்டியில் தண்ணீர் இல்லாததால் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக மின் மோட்டாரின் ஸ்வீட்சை ஆன் செய்தார்.
அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட குமார் பலத்த காயம் அடைந்தார். குமாரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X