என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிறந்த குழந்தை தலையுடன் சுற்றி திரிந்த நாய்
Byமாலை மலர்9 Sep 2021 3:20 AM GMT (Updated: 9 Sep 2021 3:20 AM GMT)
போலீசார் குழந்தையின் தலையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை:
மதுரை பீ.பி.குளம் தபால் தந்தி நகருக்கு செல்லும் சாலையில் வருமானவரித்துறை அலுவலகம் உள்ளது. நேற்று மதியம் இந்த அலுவலகம் முன்பு நாய் ஒன்று வாயில் பிறந்த குழந்தையின் தலையை கவ்விக்கொண்டு சென்றது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஒருவர் நாயை அங்கிருந்து விரட்டினார். நாய் தனது வாயில் இருந்த பிறந்த குழந்தையின் தலையை கீழே போட்டு விட்டு அங்கிருந்து ஓடியது. நாயை விரட்டிய நபர் போட்ட சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். பிறந்த குழந்தையின் தலை மட்டும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் இது குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த குழந்தையின் தலையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த தலைக்கு உரிய உடலை போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடினார்கள். அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின்னர் போலீசார் அந்த நாய் செல்லும் பாதை முழுவதும் சென்று பார்த்து உடலை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போலீசார் குழந்தையின் தலையை மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, அந்த தலையை பார்க்கும்போது அது பிறந்த 10 நாட்கள் ஆன குழந்தையின் தலை போன்று உள்ளது. தவறான உறவில் பிறந்ததால் வீசப்பட்ட குழந்தையா? அல்லது குறை மாதத்தில் இறந்த நிலையில் பிறந்த குழந்தையா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் அங்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சமீபத்தில் பிறந்த குழந்தை இறந்து உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்கிறோம்.
இது தவிர அந்த தலை ஆண் அல்லது பெண் குழந்தையின் உடலுக்கு தொடர்புடையதா? என்பது குறித்து அறிய பிரேத பரிசோதனை டாக்டரிடம் கேட்டுள்ளோம். விரைவில் அது யாருடைய குழந்தை என்பதை கண்டுபிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
மதுரை பீ.பி.குளம் தபால் தந்தி நகருக்கு செல்லும் சாலையில் வருமானவரித்துறை அலுவலகம் உள்ளது. நேற்று மதியம் இந்த அலுவலகம் முன்பு நாய் ஒன்று வாயில் பிறந்த குழந்தையின் தலையை கவ்விக்கொண்டு சென்றது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஒருவர் நாயை அங்கிருந்து விரட்டினார். நாய் தனது வாயில் இருந்த பிறந்த குழந்தையின் தலையை கீழே போட்டு விட்டு அங்கிருந்து ஓடியது. நாயை விரட்டிய நபர் போட்ட சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். பிறந்த குழந்தையின் தலை மட்டும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் இது குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த குழந்தையின் தலையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த தலைக்கு உரிய உடலை போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடினார்கள். அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின்னர் போலீசார் அந்த நாய் செல்லும் பாதை முழுவதும் சென்று பார்த்து உடலை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போலீசார் குழந்தையின் தலையை மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, அந்த தலையை பார்க்கும்போது அது பிறந்த 10 நாட்கள் ஆன குழந்தையின் தலை போன்று உள்ளது. தவறான உறவில் பிறந்ததால் வீசப்பட்ட குழந்தையா? அல்லது குறை மாதத்தில் இறந்த நிலையில் பிறந்த குழந்தையா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் அங்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சமீபத்தில் பிறந்த குழந்தை இறந்து உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்கிறோம்.
இது தவிர அந்த தலை ஆண் அல்லது பெண் குழந்தையின் உடலுக்கு தொடர்புடையதா? என்பது குறித்து அறிய பிரேத பரிசோதனை டாக்டரிடம் கேட்டுள்ளோம். விரைவில் அது யாருடைய குழந்தை என்பதை கண்டுபிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X