search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    வில்லுக்குறி பகுதியில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 50 பேருக்கு அபராதம்

    வில்லுக்குறி பகுதியில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 50 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
    அழகியமண்டபம்:

    வில்லுக்குறி பகுதியில் நேற்று மாலை குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், இளங்கோ ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக வாகனத்தில் ஹெல்மெட், முககவசம் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்களுக்கு ஹெல்மெட், முககவசம் அணியாமல் சென்றால் ஏற்படும் விளைவுகள், அவற்றை அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி அறிவுரை கூறினார்கள். மேலும், விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகள் 50 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
    Next Story
    ×