என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கொரோனா தடுப்பூசி கொரோனா தடுப்பூசி](https://img.maalaimalar.com/Articles/2021/Sep/202109020445487157_Tamil_News_Tamil-News-Vaccination-for-35-thousand-people-in-one-day-in_SECVPF.gif)
X
கொரோனா தடுப்பூசி
சென்னையில் ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
By
மாலை மலர்1 Sep 2021 11:15 PM GMT (Updated: 1 Sep 2021 11:15 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தடுப்பூசி முகாம்கள் மாற்றப்பட்டது குறித்து முறையான அறிவிப்பு பொதுமக்களிடையே சென்றடையாததால் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்தனர்.
சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 3 கொரோனா தடுப்பூசி முகாம்கள் என 45 தடுப்பூசி முகாம்கள், பள்ளிகள், கல்லூரிகள், மாநகராட்சி அலுவலகங்களில் நடத்தப்பட்டு வந்தது. நேற்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் பள்ளிகளில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அம்மா மினி கிளினிக், சமுதாய நலக்கூடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் 45 தடுப்பூசி முகாம்கள் நேற்று முதல் 200 முகாம்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 200 முகாம்களில் 35 ஆயிரத்து 728 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
![கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ்](https://img.maalaimalar.com/InlineImage/202109020445487157_1_coronaviruddcor._L_styvpf.jpg)
நேற்று 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தடுப்பூசி முகாம்கள் மாற்றப்பட்டது குறித்து முறையான அறிவிப்பு பொதுமக்களிடையே சென்றடையாததால் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்தனர். இனி வரும் நாட்களில் நாள் ஒன்றுக்கு சென்னையில் 1 லட்சத்துக்கு மேல் தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு தேவை- மத்திய அரசு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)