என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அதிராம்பட்டினத்தில் பெயிண்டர் வெட்டிக்கொலை
அதிராம்பட்டினம்:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செட்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40) பெயிண்டர். சம்பவத்தன்று இவருக்கும் வாழைகொல்லை பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான சுரேஷ் (37) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருவரும் சண்டையிட்டு கொண்டனர். இந்நிலையில் நேற்று இரவு பெயிண்டர் சுரேஷ் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை பேருந்து நிறுத்தம் பகுதிக்கு சென்றுள்ளார். இதனையறிந்து அங்கு வந்த வாழைகொல்லை சுரேஷ் திடீரென பெயிண்டர் சுரேசின் கழுத்தில் அரிவாளால் வெட்டி தப்பி ஓடினார். இதில் சம்பவ இடத்திலேயே பெயிண்டர் சுரேஷ் இறந்தார்.
தகவலறிந்த பட்டுக்கோட்டை உதவி கண்காணிப்பாளர் செங்கமல கண்ணன் மற்றும் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பெயிண்டர் சுரேஷின் உடலை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து தொழிலாளி சுரேசை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்