search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை

    கோவையில் காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மதுக்கரை மார்க்கெட் அருகே உள்ள முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து.

    இவரது மகன் சந்திரசேகரன் (வயது 20). தனியார் நிறுவன ஊழியர்.

    இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த இளம்பெண் சந்திரசேகரனுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்ந்து வந்தது.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் இளம்பெண்ணை நேரில் சந்தித்து பேச முயன்றார். ஆனால் அவர் பேச மறுத்து விட்டார்.இதனால் சந்திரசேகரன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியார் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சந்திரசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×