search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

    பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 38 லட்சம் வருவாய்

    உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 50 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 91 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
    பழனி :

    தமிழகத்தில் உள்ள ஆன்மிக தலங்களில் முக்கியமானதாகவும், முருகப்பெருமானின் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு திருவிழா காலத்தில் மட்டுமின்றி, தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    இவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதில் உள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கார்த்திகை மண்டபத்தில் நடந்த இந்த பணிக்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

    உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 50 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 91 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

    மேலும் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம் உள்ளிட்ட பொருட்களும் போடப்பட்டிருந்தது. அதன்படி தங்கம் 1¼ கிலோ (1,373 கிராம்), வெள்ளி 15¼ கிலோ (15,319 கிராம்) இருந்தது. 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×