என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்த கூடாது- ஜி.கே.வாசன் அறிக்கை
Byமாலை மலர்23 Aug 2021 3:42 AM GMT (Updated: 23 Aug 2021 3:43 AM GMT)
வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூல் செய்வதால் வாகன உரிமையாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்று ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பை இழந்து, அனைத்துதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருமானம் ஈட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும்போது வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூல் செய்வதால் வாகன உரிமையாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
சுங்கக்கட்டண உயர்வு வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கூட கொரோனா பேரிடர் காலத்தை கவனத்தில் கொண்டு கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதுதான் நியாயமானதாக இருக்கும்.
எனவே மத்திய அரசு கொரோனா கால பாதிப்பை கவனத்தில் கொண்டு சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் உயராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தமிழகத்தில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் வருகின்ற செப்டம்பர் 1-ந்தேதி முதல் சுங்கக்கட்டணத்தை உயர்த்த இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது 8 விழுக்காடு வரை கட்டணம் உயரலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பை இழந்து, அனைத்துதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருமானம் ஈட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும்போது வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூல் செய்வதால் வாகன உரிமையாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
சுங்கக்கட்டண உயர்வு வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கூட கொரோனா பேரிடர் காலத்தை கவனத்தில் கொண்டு கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதுதான் நியாயமானதாக இருக்கும்.
எனவே மத்திய அரசு கொரோனா கால பாதிப்பை கவனத்தில் கொண்டு சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X