search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீரில் மூழ்கி பலி
    X
    நீரில் மூழ்கி பலி

    திருமங்கலம் அருகே ஊரணியில் மூழ்கி சிறுவன் பலி

    திருமங்கலம் அருகே ஊரணியில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கொக்குளம் ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் பிச்சைமணி. இவரது மகன் ஆதி (வயது13). மனநலம் பாதிக்கப்பட்டவன்.

    4 நாட்களுக்கு முன்பு ஆதி, கீழஉரப்பனூர் இந்திரா காலனியில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்தான். நேற்று காலை வெளியே சென்ற அவன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கீழ உரப்பனூர் இந்திரா காலனி எதிரே உள்ள ஊரணியில் ஆதி தண்ணீரில் மூழ்கிய நிலையில் பிணமாக கிடந்தான். இதுகுறித்து திருமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×