என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சியில் சிறுமியை திருமணம் செய்தவர் கைது
Byமாலை மலர்17 Aug 2021 4:45 AM GMT (Updated: 17 Aug 2021 4:45 AM GMT)
பொள்ளாச்சியில் சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளியை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் கடந்த 5 வருடங்களாக வால்பாறையில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார். 2-வது அலையாக கொரோனா பரவியதால் காப்பக நிர்வாகிகள் சிறுமியை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த ஜூலை மாதம் சிறுமி 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்காக காப்பகத்துக்கு வந்தார். அப்போது காப்பக நிர்வாகி ஒருவர் சிறுமியின் கழுத்தை பார்த்தபோது அவரது கழுத்தில் தாலிக்கயிறு கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அதிகாரிகள் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணியூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி விஜயகுமார் (வயது 28) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். பின்னர் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். மேலும் சிறுமியிடம் அவர் பலமுறை உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து குழந்தைகள் நல அமைப்பினர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த கட்டிட தொழிலாளி விஜயகுமாரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் கடந்த 5 வருடங்களாக வால்பாறையில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார். 2-வது அலையாக கொரோனா பரவியதால் காப்பக நிர்வாகிகள் சிறுமியை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த ஜூலை மாதம் சிறுமி 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்காக காப்பகத்துக்கு வந்தார். அப்போது காப்பக நிர்வாகி ஒருவர் சிறுமியின் கழுத்தை பார்த்தபோது அவரது கழுத்தில் தாலிக்கயிறு கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அதிகாரிகள் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணியூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி விஜயகுமார் (வயது 28) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். பின்னர் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். மேலும் சிறுமியிடம் அவர் பலமுறை உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து குழந்தைகள் நல அமைப்பினர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த கட்டிட தொழிலாளி விஜயகுமாரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X