என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
Byமாலை மலர்14 Aug 2021 10:17 AM GMT (Updated: 14 Aug 2021 10:17 AM GMT)
ஏர்வாடி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயமானது தொடர்பாக கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
குமரி மாவட்டம், கொட்டாரம் அருகே உள்ள லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (25). கட்டிட தொழிலாளி. இவரும், ஏர்வாடி அருகே உள்ள கோசல்ராம்நகர், வடக்கு காலனிதெருவை சேர்ந்த முத்துசெல்வி (24) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் கிருஷ்ணகுமார் மாமனார் வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் கிருஷ்ணகுமாருக்கும், முத்து செல்விக்கும் குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 6 மாதங்களாக முத்துசெல்வி கணவர் கிருஷ்ணகுமாருடன் பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமல் இருந்து வந்தார். இதற்கிடையே கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்த முத்துசெல்வி திடீரென மாயமானார்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணகுமார் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் முத்து செல்வி குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனைதொடர்ந்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாயமான முத்துசெல்வியை தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம், கொட்டாரம் அருகே உள்ள லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (25). கட்டிட தொழிலாளி. இவரும், ஏர்வாடி அருகே உள்ள கோசல்ராம்நகர், வடக்கு காலனிதெருவை சேர்ந்த முத்துசெல்வி (24) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் கிருஷ்ணகுமார் மாமனார் வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் கிருஷ்ணகுமாருக்கும், முத்து செல்விக்கும் குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 6 மாதங்களாக முத்துசெல்வி கணவர் கிருஷ்ணகுமாருடன் பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமல் இருந்து வந்தார். இதற்கிடையே கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்த முத்துசெல்வி திடீரென மாயமானார்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணகுமார் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் முத்து செல்வி குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனைதொடர்ந்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாயமான முத்துசெல்வியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X