என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்கள் ஆக்கி அணிக்கு பதக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து
Byமாலை மலர்5 Aug 2021 6:53 AM GMT (Updated: 5 Aug 2021 8:21 AM GMT)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி ஆண்கள் அணி 41 வருடங்களுக்கு பிறகு வென்று வரலாற்று சாதனை படைத்து நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டம். 41 ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஆக்கியில் 12-வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றிருக்கும் இந்திய ஆக்கி அணிக்கு எனது பாராட்டுகள்.
தெலுங்கானா மற்றும் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்:-
டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்திய அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றனர். 41 வருடங்களுக்கு பிறகு இதை வென்று வரலாற்று சாதனை படைத்து நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சாதனை வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கிப் போட்டிகளில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது. ஆக்கிப் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கனவை சாத்தியமாக்கிய இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.
ஆக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு. ஆனால் 1980-ம் ஆண்டுக்கு பிறகு 41 ஆண்டுகளாக ஆக்கியில் நம்மால் பதக்கம் வெல்ல முடியாதது வேதனையாகவே இருந்து வந்தது. இன்றைய வெற்றியின் முலம் வேதனை மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் மாறி இருக்கிறது.
2024 பாரிஸ் ஒலிம்பிக் ஆக்கிப் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று இழந்த பெருமையை முழுமையாக பெற வேண்டும். அந்த அணியில் தமிழகம் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம். அது நிச்சயமாக நிறைவேறும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டம். 41 ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஆக்கியில் 12-வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றிருக்கும் இந்திய ஆக்கி அணிக்கு எனது பாராட்டுகள்.
இந்த வெற்றியுடன் இந்திய ஆக்கி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று உறுதியாக நம்புகிறேன்.
தெலுங்கானா மற்றும் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்:-
டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்திய அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றனர். 41 வருடங்களுக்கு பிறகு இதை வென்று வரலாற்று சாதனை படைத்து நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சாதனை வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கிப் போட்டிகளில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது. ஆக்கிப் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கனவை சாத்தியமாக்கிய இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.
ஆக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு. ஆனால் 1980-ம் ஆண்டுக்கு பிறகு 41 ஆண்டுகளாக ஆக்கியில் நம்மால் பதக்கம் வெல்ல முடியாதது வேதனையாகவே இருந்து வந்தது. இன்றைய வெற்றியின் முலம் வேதனை மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் மாறி இருக்கிறது.
2024 பாரிஸ் ஒலிம்பிக் ஆக்கிப் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று இழந்த பெருமையை முழுமையாக பெற வேண்டும். அந்த அணியில் தமிழகம் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம். அது நிச்சயமாக நிறைவேறும்.
இவ்வாறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இதையும் படியுங்கள்...உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜனதாவில் 17 பேர் குழு- அண்ணாமலை அறிவிப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X