என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சியில் வீட்டின் மேற்கூரையை உடைத்து பணம் கொள்ளை- பெயிண்டர் கைது
Byமாலை மலர்28 July 2021 11:11 AM GMT (Updated: 28 July 2021 11:11 AM GMT)
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வீட்டின் மேற்கூரையை உடைத்து பணம் கொள்ளையடித்தது தொடர்பாக பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பழனியப்பன் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 50). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் நெகமம் சென்றார்.
பின்னர் நேற்று வீடு திரும்பி வீட்டின் உள்ளே சென்றார். அப்போது வீட்டின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அறையில் சென்று பார்த்த போது அங்கு இருந்த பீரோ திறந்து கிடந்தது. உடனடியாக பீரோவை பார்த்தார்.
அப்போது அதில் இருந்த உண்டியல் பணம் ரூ.2 ஆயிரம் மாயமாகி இருந்தது. இவர் குடும்பத்துடன் வெளியில் சென்றதை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் மேற்கூரை உடைத்து உள்ளே நுழைந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆறுச்சாமி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்கிற கிருஷ்ணகுமார் (38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயிண்டராக வேலை செய்து வந்ததும் ஆறுச்சாமியின் வீட்டில் யாரும் இல்லாததால் மேற்கூரையை உடைத்து அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பழனியப்பன் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 50). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் நெகமம் சென்றார்.
பின்னர் நேற்று வீடு திரும்பி வீட்டின் உள்ளே சென்றார். அப்போது வீட்டின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அறையில் சென்று பார்த்த போது அங்கு இருந்த பீரோ திறந்து கிடந்தது. உடனடியாக பீரோவை பார்த்தார்.
அப்போது அதில் இருந்த உண்டியல் பணம் ரூ.2 ஆயிரம் மாயமாகி இருந்தது. இவர் குடும்பத்துடன் வெளியில் சென்றதை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் மேற்கூரை உடைத்து உள்ளே நுழைந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆறுச்சாமி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்கிற கிருஷ்ணகுமார் (38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயிண்டராக வேலை செய்து வந்ததும் ஆறுச்சாமியின் வீட்டில் யாரும் இல்லாததால் மேற்கூரையை உடைத்து அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X