search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்- 2 வாலிபர்கள் கைது

    திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த விடையூர் ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு அரக்கோணம் புதுப்பேட்டை சானத் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பார்த்திபன் (வயது 23), மற்றும் அவரது நண்பரான சுரேஷ் ( 23) ஆகிய இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததையடுத்து, மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×