என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மீனவர்கள் மீனவர்கள்](https://img.maalaimalar.com/Articles/2021/Jul/202107250909422635_Tamil_News_Tamil-News-TN-Government-information-free-modern-transponder_SECVPF.gif)
X
மீனவர்கள்
மீனவர்களுக்கு இலவசமாக நவீன ‘டிரான்ஸ்பான்டர்’ கருவிகள்- தமிழக அரசு தகவல்
By
மாலை மலர்25 July 2021 3:39 AM GMT (Updated: 25 July 2021 3:39 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ரூ.15 கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரம் ‘டிரான்ஸ்பான்டர்’ கருவிகளை வரும் அக்டோபர் மாதம் மீனவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கும்.
சென்னை:
சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மீன்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஜவஹர் கூறியதாவது:-
தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டுவதை தடுக்கவும், மீன்பிடி படகுகள் செல்வதை கண்காணிக்கவும், தகவல் தொடர்புக்கான நவீன கருவியான ‘டிரான்ஸ்பான்டரை’ இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த ‘டிரான்ஸ்பான்டர்’ கருவிகளை மீனவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்க உள்ளது. ரூ.15 கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரம் ‘டிரான்ஸ்பான்டர்’ கருவிகளை வரும் அக்டோபர் மாதம் மீனவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கும்.
மேலும், மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கடல் எல்லையை தாண்டுவதை தடுப்பதோடு, புயல், மழைக்காலங்களில் கடலில் சிக்கியுள்ள படகுகளை கண்டறியவும் இந்த ‘டிரான்ஸ்பான்டர்’ கருவி உதவும். இக்கருவிகளை இஸ்ரோ நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்துவருகிறது. இது மீனவர்களுக்கு மிகுந்த பயனை அளிப்பதோடு, அவர்கள் ஆபத்தில்லாமல் மீன்பிடிப்பதை உறுதி செய்ய உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மீன்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஜவஹர் கூறியதாவது:-
தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டுவதை தடுக்கவும், மீன்பிடி படகுகள் செல்வதை கண்காணிக்கவும், தகவல் தொடர்புக்கான நவீன கருவியான ‘டிரான்ஸ்பான்டரை’ இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த ‘டிரான்ஸ்பான்டர்’ கருவிகளை மீனவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்க உள்ளது. ரூ.15 கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரம் ‘டிரான்ஸ்பான்டர்’ கருவிகளை வரும் அக்டோபர் மாதம் மீனவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கும்.
மேலும், மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கடல் எல்லையை தாண்டுவதை தடுப்பதோடு, புயல், மழைக்காலங்களில் கடலில் சிக்கியுள்ள படகுகளை கண்டறியவும் இந்த ‘டிரான்ஸ்பான்டர்’ கருவி உதவும். இக்கருவிகளை இஸ்ரோ நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்துவருகிறது. இது மீனவர்களுக்கு மிகுந்த பயனை அளிப்பதோடு, அவர்கள் ஆபத்தில்லாமல் மீன்பிடிப்பதை உறுதி செய்ய உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)