search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 59 பேர் பாதிப்பு

    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,744 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.
    திருவள்ளூர்:

    தமிழக அரசு மேற்கொண்ட சீரிய முயற்சியின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாகுவோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 59 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 407 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 722 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,744 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளனர்.
    Next Story
    ×