என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயர் கல்லறையை தேடும் அதிகாரிகள்
Byமாலை மலர்21 July 2021 10:30 AM GMT (Updated: 21 July 2021 1:28 PM GMT)
ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயரின் கல்லறையை திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலர்கள் தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:
ஐரோப்பாவை சேர்ந்தவர் ஒயிட்என்னிஸ். இவர் கடந்த 1810-ம் ஆண்டு சென்னை மாகாண கலெக்டராக இருந்தவர். இவருடைய கல்லறை திண்டுக்கல்லில் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அதுகுறித்து ஆராய மதுரை ஐகோர்ட்டு கிளை திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து மாவட்டகலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் மேற்பார்வையில் நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் கல்லறையை தேடும் பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரம் பகுதியில் உள்ள காமராஜ்நகரில் கல்லறை தோட்டம் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து புதர்மண்டி கிடந்த அந்த பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது அங்கு 40-க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதில் பெரும்பாலானோர் ஆங்கிலேயே அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்கள் ஆகியோரின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் ஒயிட்என்னிஸ் கல்லறை கிடைக்கவில்லை. இதனையடுத்து வேறு ஏதேனும் பகுதியில் அவரது கல்லறை உள்ளதா என்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லறை இருந்ததே தெரியாமல் அப்பகுதி மக்கள் வசித்து வந்தநிலையில் தற்போது 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பாவை சேர்ந்தவர் ஒயிட்என்னிஸ். இவர் கடந்த 1810-ம் ஆண்டு சென்னை மாகாண கலெக்டராக இருந்தவர். இவருடைய கல்லறை திண்டுக்கல்லில் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அதுகுறித்து ஆராய மதுரை ஐகோர்ட்டு கிளை திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து மாவட்டகலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் மேற்பார்வையில் நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் கல்லறையை தேடும் பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரம் பகுதியில் உள்ள காமராஜ்நகரில் கல்லறை தோட்டம் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து புதர்மண்டி கிடந்த அந்த பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது அங்கு 40-க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதில் பெரும்பாலானோர் ஆங்கிலேயே அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்கள் ஆகியோரின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் ஒயிட்என்னிஸ் கல்லறை கிடைக்கவில்லை. இதனையடுத்து வேறு ஏதேனும் பகுதியில் அவரது கல்லறை உள்ளதா என்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லறை இருந்ததே தெரியாமல் அப்பகுதி மக்கள் வசித்து வந்தநிலையில் தற்போது 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X