search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த நபர்களுக்கு அறிவுரை வழங்கிய கலெக்டர்
    X
    சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த நபர்களுக்கு அறிவுரை வழங்கிய கலெக்டர்

    திருப்பத்தூரில் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு- முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

    திருப்பத்தூர் மாவட்டத்தில்‌ கொரோனா தொற்று நாளுக்குநாள் குறைந்து வருகிறது. தினமும் 21 பேர் முதல் 25 பேர் வரை மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகிறார்கள்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றி அனைத்து கடைகளிலும் கூட்டம் இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

    அதைத்தொடர்ந்து நேற்று கலெக்டர் அமர் குஷ்வாஹா, சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை ஆகியோர் நேற்று திடீரென திருப்பத்தூர் ஜின்னா ரோடு, ஆலங்காயம் மெயின் ரோடு, நகைக்கடை பஜார், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள பல்வேறு கடைகளில் ஆய்வு செய்தனர். பஸ் நிலையத்திற்கு சென்று பஸ்களில் பயணிகள் முக கவசம் அணிந்து உள்ளார்களா என்றும் ஆய்வு செய்தனர்.

    அப்போது பல்வேறு கடைகளில் முக கவசம் அணியாமல் இருந்த கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ரூ. 200 அபராதமும், சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். அதேபோன்று அரசு கூறிய விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தாசில்தார் சிவப்பிரகாசம், மண்டல தாசில்தார் ரேவதி, வருவாய் ஆய்வாளர் சிவப்பிரகாசம், சிலம்பரசன், மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

    இதுகுறித்து கலெக்டர் கூறுகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில்‌ கொரோனா தொற்று நாளுக்குநாள் குறைந்து வருகிறது. தினமும் 21 பேர் முதல் 25 பேர் வரை மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகிறார்கள். பொதுமக்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். மாவட்டத்தை வைரஸ் தொற்றில்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என கூறினார்.
    Next Story
    ×