search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியாறு அணை
    X
    பெரியாறு அணை

    பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்வு

    வைகை அணையின் நீர்மட்டம் 67.62 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 1254 கனஅடி தண்ணீர் வருகிறது.
    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கி வருவது முல்லைபெரியாறு அணை. இந்த அணையில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதை தொடர்ந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியது.

    தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று 127.25 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 128.80 அடியாக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 1½ அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நேற்று 1582கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 5079 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1200 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்இருப்பு 4439 மி.கனஅடியாக உள்ளது.

    இதேபோல வைகை அணையின் நீர்மட்டம் 67.62 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 1254 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 769 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்இருப்பு 5231 மி.கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 126.11 அடி, வரத்து மற்றும் திறப்பு 3 கனஅடி.

    தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தின் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அருவியில் நீராட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிசெல்கின்றனர்.

    முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், தேனி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாலும் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 18-ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியாறு 46, தேக்கடி 34.6, கூடலூர் 21.5, சண்முகாநதிஅணை 9.5, உத்தமபாளையம் 13.2, கொடைக்கானல் 4, மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
    Next Story
    ×