search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியாறு அணை"

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.90 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணைமூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு மீண்டும் அதிகரிக்கப்பட்டது. நேற்று 511 கனஅடியாக இருந்த நீர்திறப்பு இன்று காலை 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    இதனால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. அணைக்கு 618 கனஅடிநீர் வருகிறது. அணையின்நீர்மட்டம் 138.70 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியாக உள்ளது. 1098 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1169 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.90 அடியாக உள்ளது. 56 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 99.03 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • நவம்பர் 20-க்குள் தமிழ்நாடு, கேரளா அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
    • பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    முல்லை பெரியாறு அணை பகுதியில் கார் பார்க்கிங் அமைக்க அனுமதி கோரி கேரள அரசு தனியாக மனு தாக்கல் செய்துள்ளது. கேரளா நடவடிக்கைக்கு எதிராக தமிழகமும் மனு தாக்கல் செய்தது. கார் பார்க்கிங் விவகாரத்தில் கூட்டு கணக்கெடுப்பு பணிகளை நடத்துவதே சரியான தீர்வாக இருக்கும் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு வழக்கை நவம்பர் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

    நவம்பர் 20-க்குள் தமிழ்நாடு, கேரளா அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்படும் மேற்பார்வை குழு தலைமையில் நில ஆய்வை மேற்கொள்ள கோர்ட்டு முடிவு செய்துள்ளது.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது.
    • பேபி அணை, மெயின் அணை, ஷட்டர்கள் கேலரி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே உள்ளது. நாற்றங்கால் அமைத்து விவசாய பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள் மழை இல்லாததால் கவலையில் உள்ளனர்.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.90 அடியாக உள்ளது. அணைக்கு 67 கன அடி நீர் வருகிறது. பாசனம் மற்றும் குடிநீருக்காக 250 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 51.91 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது. 29 கன அடி நீர் வருகிறது. 10 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.73 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பருவமழை தொடங்கியதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மதுரை நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் மலர்விழி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    பேபி அணை, மெயின் அணை, ஷட்டர்கள் கேலரி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பெரியாறு அணை செயற்பொறியாளர் ஷாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் ராஜகோபால் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது

    கூடலூர்:

    பருவமழை கைகொடுத்த நிலையில் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடிவரை எட்டியது. அதனைதொடர்ந்து தமிழகம் மற்றும் கேரள பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் சரிய தொடங்கியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 1081 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1810 கனஅடியாக உயர்ந்துள்ளது. இேதபோல் அணையின் நீர்மட்டமும் 135.95 அடியிலிருந்து 136.25 அடியாக உயர்ந்துள்ளது. தமிழக பகுதிக்கு 933 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. 832 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 769 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.14 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 14.2, தேக்கடி 19.2, கூடலூர் 5.2, உத்தமபாளையம் 1.8, வீரபாண்டி 2.4, அரண்மனைப்புதூர் 2.4, போடி 7.8, மஞ்சளாறு 1.4, பெரியகுளம் 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தினர்.
    • மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்க கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால், குறிஞ்சி குமரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மேலூர் பகுதி ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் தேதி குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    முன்னுரிமை பெற்ற பூர்வீக பெரியார் ஒருபோக பாசன பகுதிகளுக்கு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி பாசன தண்ணீர் திறக்கவும், அதன் பின்னரே விரிவாக்க கால்வாய் களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

    கிராம பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறையும், கூலி உயர்வும் ஏற்பட்டு விவசாய பணிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது.

    எனவே பாசன தண்ணீர் திறந்து 2 மாத காலத்திற்காவது விவசாயம் நடைபெறும் பாசனப்பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.

    அதற்கு அனுமதி இல்லாவிட்டால் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணியில் ஈடுபடுத்த வேண்டும். தற்போது பெய்த மழையில் பெரியார் அணை தண்ணீர் கடலில் கலந்து வீணாக கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இதனால் தமிழக விவசாயிகள் நலன் கருதி பெரியார் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து வைக்க தமிழக எல்லைப் பகுதியில் மற்றொரு அணை கட்ட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத சூழ்நிலை உள்ளதாகவும்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தவரை முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. அ

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு அணையினால் பயனடைந்து வரும் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்காததற்கு 'ரூல் கர்வ்' என்ற விதி தான் காரணம் என்றும், இந்த விதியின் காரணமாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத சூழ்நிலை உள்ளதாகவும். இதன் காரணமாக அங்கு கடும் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த ரூல் கர்வ் விதிக்கு விவசாய சங்கங்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

    அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தவரை முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 'ரூல் கர்வ்' பிரச்சினை இல்லை என்றே நான் கருதுகிறேன். இது தொடர்பான வழக்கு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் முன்பு வந்தபோது, 'ரூல் கர்வ்' தொடர்பான விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்த தாக நான் அறிகிறேன். ஆனால், அதன்மீது முடிவு எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.

    இந்த 'ரூல் கர்வ்' விதிக்கு தமிழ்நாடு அரசு எப்போது ஒப்புதல் கொடுத்தது? இதற்கான அனுமதி யாரால் அளிக்கப்பட்டது? இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்து கேட்கப்பட்டதா? தமிழ்நாடு அரசினுடைய ஒப்புதல் இல்லாமலேயே மத்திய நீர் வள ஆணையம் இந்த 'ரூல் கர்வ்' விதியை வகுத்துள்ளதா? என்பதையெல்லாம் தி.மு.க. அரசு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று விவசாய மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ரூல் கர்வ் அட்டவணையை அனைவரின் பார்வைக்கு வெளியிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் அவர்களிடையே இருக்கிறது.

    எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, 'ரூல் கர்வ்' விதி குறித்து நாட்டு மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு எடுத்துரைக்கவும், 'ரூல் கர்வ்' அட்டவணையை அனைவரின் பார்வைக்கு வெளியிடவும், தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய 'ரூல் கர்வ்' குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.
    • வைகை அணை நீர்மட்டம் 61.68 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    152 அடி உயரமுள்ள முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2 வாரமாக கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீாமட்டம் 135.90 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 136 அடியை கடக்கும் என எதிர்பார்த்த நிலையில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் சரிய தொடங்கியது.

    அதன் பிறகு குறிப்பிடத்தக்க மழைபொழிவு இல்லை. இதனால் தற்போது அணையின் நீர்மட்டம் 134.35 அடியாக உள்ளது. நீர்வரத்து 1168 கனஅடி, திறப்பு 1972 கனஅடி, இருப்பு 5715 மி.கனஅடி.

    வைகை அணை நீர்மட்டம் 61.68 அடியாக உள்ளது. வரத்து 1750 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 3931 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.80 அடி, வரத்து 21 கனஅடி, திறப்பு 10 கனஅடி, இருப்பு 335 மி.கனஅடி.

    சோத்துப்பாறை நீர்மட்டம் 70.53 அடி, திறப்பு 3 கனஅடி.

    • முல்லைபெரியாறு அணையிலிருந்து 1789 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • பெரியாறு 84.6, தேக்கடி 31.2, கூடலூர் 14.2, உத்தமபாளையம் 2.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 5258 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8143 கனஅடியாக அதிகரித்துள்ளது. 152 அடி உயரம் உள்ள முல்லைபெரியாறு அணையில் தற்போது 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 130.85 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 133.20 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2 அடி அதிகரித்திருப்பதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அணையிலிருந்து 1789 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்இருப்பு 5446 மி.கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு 150 மெகாவாட்டுக்கு அதிகமாக மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 56.55 அடியாக உள்ளது. வரத்து 1695 கனஅடி, திறப்பு 969 கனஅடி, நீர் இருப்பு 2975 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 72.32 அடி, திறப்பு 6 கனஅடி.

    பெரியாறு 84.6, தேக்கடி 31.2, கூடலூர் 14.2, உத்தமபாளையம் 2.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • பெரியாறு அணைக்கு எதிராக கேரள அரசு பொய் பிரசாரம் செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
    • ஆவணப்படம் எடுக்க இணைய வழி கையெழுத்து இயக்கத்தை கேரளா நடத்தி வருகிறது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு அணையின் தென் மாவட்ட உயிர்நாடி பிரச்சினையில் மக்களின் உரிமையை காக்க அ.தி.மு.க. அரசு எடுத்த முயற்சியை யாராலும் மறுக்க முடியாது. முல்லைப் பெரியாரை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பல லட்சம் விவசாயி குடும்பங்களும், 80 லட்சம் மக்களுக்கும், பாசனத்திற்கும் குடிநீரையும் நம்பி உள்ளனர்.

    தற்போது கேரளா முல்லைப் பெரியாறுக்கு எதிராக ஆவணப்படம் எடுக்க இணைய வழி கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. இதனால் அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

    கேரளா முல்லை பெரியாறுக்கு எதிராக ஏற்கனவே ஆவணப்படம் எடுத்து சர்ச்சை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஆவணப்படம் எடுக்க மக்களிடம் வசூல் செய்ய இணைய வழி கையெழுத்து இயக்கத்தை செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

    தற்போது அணையில் நீர்மட்டம் 127 அடிக்கு மேல் உள்ளது. பேபி அணை பழுது பார்க்கப்பட்ட பின் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் அணையை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்று உறுதி செய்துள்ளனர். கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்து வருகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஆனால் கேரளாவில் உள்ள அரசியல் இயக்கங்கள் சார்பில் பெரியாறு அணைக்கு எதிராக கேரளா பிரசாரம் செய்து வருகிறது. தொழில் நுட்ப வல்லுனர் குழு, கண்காணிப்பு குழு ஆய்வு செய்தும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்பும் இந்த சர்ச்சை வருவது வேதனை அளிக்கிறது.

    குறிப்பாக கேரளாவில் மீண்டும் ஆவணப்படம் எடுக்க சமூக வலைதளத்தில் நிதி வசூல் செய்வது மட்டுமல்லாது கேரள நடிகர்களும் அணைக்கு எதிராக பேசுகின்றனர். இதனால் தென் மாவட்ட விவசாயிகள் கொந்தளித்து போய் உள்ளனர்.கேரளாவின் இந்த பொய் பிரச்சாரத்திற்கு சரியான விளக்கங்களை நாம் சொல்ல வேண்டும்.

    கேரளா, முல்லைப்பெரியாறுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்ய வேண்டாம் . இது இரு மாநில உறவுகளுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து உரிமையைநிலை நாட்ட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.60 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இருபோக நெல்சாகுபடிக்கு ஆதாரமாக உள்ளது.

    இந்த ஆண்டு போதிய அளவு நீர்மட்டம் இருந்ததால் வழக்கம்போல் ஜூன் 1ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது. இந்த நிலையில் அணையில் தமிழக நீர்பாசனத்துறை தலைமை பொறியாளர் ஞானசேகர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதி, நீர் கசிவு கேலரி உள்ளிட்ட இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையின் நீர்மட்டத்திற்கு ஏற்ப கசிவு நீர் அளவு சரியாக உள்ளதா? என்பதையும் கண்காணித்தனர்.

    அப்போது கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், ரேவதி, நவீன்குமார், பரதன், பிரவீன்குமார் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பருவமழை தாமதமாகி வரும் நிலையில் தமிழக அதிகாரிகள் அணையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நேற்று தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.60 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 525 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 56.84 அடி. வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44 அடி. 73 கனஅடி நீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.67 அடியாக உள்ளது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 6.2. தேக்கடி 3.4, கூடலூர் 9.6, ஆண்டிபட்டி 31, அரண்மனைபுதூர் 6.6, போடி 20.6, மஞ்சளாறு அணை 4, சோத்துப்பாறை 3, வீரபாண்டி 14, உத்தமபாளையம் 4.3, வைகை அணை 4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.


    பெரியாறு அணை நீர் மட்டம் 152 அடி உயர்த்தும் வரை போராடுவோம் என்று விவசாயிகள் ஆவேசமாக கூறியுள்ளனர். #Keralasouthwestmonsoon #Periyardam

    கம்பம்:

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க விடமாட்டோம் என்று விவசாயிகள் ஆவேசமாக கூறியுள்ளனர்.

    இது குறித்து அங்குள்ள விவசாயிகள் கூறுகையில், கூடலூர் பாண்டியன்:- முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த மூவர் மற்றும் ஐவர் குழுவினர் அணை பலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது இடுக்கி மாவட்டத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரியாறு அணை நீர் மட்டத்தை குறைப்பதால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கும். தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பதற்கு வழிவகை செய்யும் ஆவணங்களை பென்னி குவிக் பேத்தி டயானா ஜிப் மாவட்ட கலெக்டரிடம் அளித்துச் சென்றுள்ளார். தற்போது நீர் மட்டத்தை குறைக்க தொடரப்பட்டுள்ள வழக்கு விளம்பரத்துக்காகவே என்று தோன்றுகிறது.


    பொன் காட்சி கண்ணன்:- தமிழகம் மற்றும் கேரள மக்களிடையே தற்போது நல்லுறவு பேணிக் காக்கப்பட்டு வருகிறது. இதை சீர் குலைக்கும் வகையில் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    ஆனால் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. அணையின் நீர் மட்டம் 152 அடி உயரும் வரை போராடுவோம்.

    ராஜா:- முல்லைப் பெரியாறு அணையில் 1924-ம் ஆண்டே 152 அடி வரை நீர் தேக்கப்பட்டுள்ளது. தற்போது இடுக்கி மாவட்டத்தில் வெள்ள அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்துக்கு அதிக பட்சமாக 3 ஆயிரம் கன அடி நீரே திறக்க முடியும். எனவே தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்தால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் விவசாயி நிலங்கள் பயன்பெறும்.


    பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் சிலர் ஆக்கிரமித்து ரிசார்டுகள் மற்றும் ஓட்டல்கள் கட்டியுள்ளனர். தற்போது அவற்றுக்கு பாதிப்பு என்பதாலேயே நீர் மட்டத்தை குறைக்க அழுத்தம் தரப்படுகிறது. எனவே தமிழக அரசு நமது உரிமையை விட்டுக் கொடுக்கக்கூடாது. 152 அடி வரை நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜெயபால்:- கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை விவசாய நிலத்துக்கு பயன்படுத்த பிரிட்டிஷ் பொறியாளர் ஜான் பென்னி குவிக் பெரியாறு அணையை கட்டினார். ஆனால் கேரள அரசியல்வாதிகள் தங்கள் சுய லாபத்துக்காக பொதுமக்களை திசை திருப்புகின்றனர்.

    இதனாலேயே அணை பலம் இழந்து விட்டது போன்று வதந்தி பரப்பி வருகின்றனர். ஐவர் மற்றும் மூவர் குழுவினர் அணையின் பலத்தை உறுதிபடுத்தயுள்ளனர். எனவே பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீர் தேக்கினால் தமிழக விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். நீர்மட்டத்தை குறைத்தால் போராட்டம் நடத்தப்படும்.

    மழை குறைந்து வருவதால் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    கூடலூர்:

    கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இடுக்கி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. 120 அடிக்கு கீழ் இருந்த அணையின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்து 135 அடியை எட்டியது.

    உச்சபட்ச அளவான 142 அடியை எட்டிவிடும் என விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்மட்டம் உயர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்து வருவதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.20 அடியாக உள்ளது. வரத்து 2155 கன அடியாகவும், திறப்பு 2000 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5916 மி. கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 52.26 அடியாக உள்ளது. வரத்து 1646 கன அடி. திறப்பு 960 கன அடி. இருப்பு 2302 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.95 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.19 அடி.

    பெரியாறு 6.4, தேக்கடி 5.4, கூடலூர் 1.5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
    ×