என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செஞ்சி வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம்.
இங்கு தர்மபுரி, வேலூர், ஆம்பூர் மற்றும் புதுவை, பெங்களுர் போன்ற மாநிலங்களில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து இங்கு நடைபெறும் சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
வருகிற 21-ந்தேதி பக்ரீத் பண்டிகை ஆகும். இதையொட்டி இன்று கூடிய வாரச்சந்தையில் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. பெங்களூர் மற்றும் சேலம், திருவண்ணாமலை, வேலுர், தருமபுரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்ய செஞ்சி வார சந்தைக்கு வந்து குவிந்தனர்.
அதற்கேற்றாற் போல் கிராமப்பகுதிகளிலிருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக செம்மறி ஆடுகள் ரூ.3000 முதல் ரூ.4000 வரையிலும் ஆடி அமாவாசையொட்டி கருப்பு ஆடுகள் ரூ.8000 முதல் ரூ.15,000 வரை விற்கப்பட்டது.
இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். உடனுக்குடன் ஆடுகள் விற்பனை ஆனதால் கிராமப்புற விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்