search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விழுப்புரத்தில் ரூ.1¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- வாலிபர் கைது

    புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தது தொடர்பாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோட்டில் உள்ள ஒரு அரிசி மில் குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அங்கிருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதி்ப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விழுப்புரம் மருதூர் பகுதியை சேர்ந்த அசரப்அலி மகன் முகமது அசாருதீன் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தது தொடர்பாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×