search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிறுமியிடம் ‘சில்மி‌ஷம்’- முதியவர் போக்சோவில் கைது

    அரூருக்கு வந்த முதியவர் ராமரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி உள்ளார்.

    சிறுமி கடந்தாண்டு ஜூலை 20-ந் தேதி இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராமர் (வயது 70) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தனர்.

    பின்னர் ராமர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த ராமரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று அரூருக்கு வந்த ராமரை போலீசார் கைது செய்து, அரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை தருமபுரி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×