என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
Byமாலை மலர்1 July 2021 8:02 AM GMT (Updated: 1 July 2021 8:02 AM GMT)
சசிகலா அதிமுக நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வரும் நிலையில் அதற்கு கட்சி ரீதியாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11.30 மணிக்கு வந்தார்.
அவர் சென்னையில் உள்ள 9 மாவட்டச் செயலாளர்களை அழைத்து அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் சென்னை மாவட்ட செயலாளர்களான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெங்கடேஷ் பாபு, ஆர்.கே.ராஜேஷ், ஆதிராஜாராம், வேளச்சேரி அசோக், தி.நகர் சத்யா, விருகை ரவி, பாலகங்கா, கே.பி.கந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களுடன் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
சமீப நாட்களாக சசிகலா அ.தி.மு.க. நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வரும் நிலையில் அதற்கு கட்சி ரீதியாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
முன்னதாக தலைமை கழகத்தில் அ.ம.மு.க. வடசென்னை மாவட்ட செயலாளர் வெற்றிநகர் சுந்தர், மாவட்ட மாணவர் அணி செயலாளர் விஷ்வா சந்தோஷ், கொளத்தூர் பகுதி செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11.30 மணிக்கு வந்தார்.
அவர் சென்னையில் உள்ள 9 மாவட்டச் செயலாளர்களை அழைத்து அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் சென்னை மாவட்ட செயலாளர்களான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெங்கடேஷ் பாபு, ஆர்.கே.ராஜேஷ், ஆதிராஜாராம், வேளச்சேரி அசோக், தி.நகர் சத்யா, விருகை ரவி, பாலகங்கா, கே.பி.கந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களுடன் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
சமீப நாட்களாக சசிகலா அ.தி.மு.க. நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வரும் நிலையில் அதற்கு கட்சி ரீதியாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
முன்னதாக தலைமை கழகத்தில் அ.ம.மு.க. வடசென்னை மாவட்ட செயலாளர் வெற்றிநகர் சுந்தர், மாவட்ட மாணவர் அணி செயலாளர் விஷ்வா சந்தோஷ், கொளத்தூர் பகுதி செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X