search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    கபிலர்மலை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    கபிலர்மலை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர்:

    ஆந்திர மாநிலம் கங்காபுரம் பகுதியில் உள்ள பனசபத்திராவை சேர்ந்தவர் மந்தாகி ராமராவ் (வயது 37). இவருடைய மனைவி சுஜாதா (23). இவர்களுக்கு சித்து (4) என்ற மகன் உள்ளான். இவர்கள் அனைவரும் தற்போது குடும்பத்துடன் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூரில் வசித்து வந்தனர்.

    மந்தாகி ராமராவ் அதே பகுதியில் உள்ள ஒரு‌ காகித ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று மந்தாகி ராமராவ் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்றார். அப்போது தண்ணீர் தொட்டி அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்து கம்பி அறுந்து எதிர்பாராதவிதமாக மந்தாகி ராமராவ் மீது விழுந்தது.

    இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பரமத்தி போலீசார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மந்தாகி ராமராவின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×