search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பேரளம் அருகே சாராயம் விற்ற 5 பேர் கைது

    பேரளம் அருகே சாராயம் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரளம்:

    பேரளம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேரளம் அருகே வெள்ளை அதம்பாரில் வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஜெயச்சந்திரன் (வயது 42) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேப்போல் சட்ட விரோதமாக வீட்டில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27), விளாகம் பகுதியில் ராஜசேகர் (33), மூவேந்தன் (18), ஜெகதீசன் (31) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 440 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×