search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரளம்"

    பேரளம் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே உள்ள திருமெஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் துரை. விவசாயி. இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 55).

    துரை நேற்று மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி முள்வேலியில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அமிர்தவல்லி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். துரை காயமின்றி தப்பினார்.

    இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் பேரளம் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×