search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருமண ஆசை காட்டி சிறுமி கடத்தல்- வாலிபர் கைது

    உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகே சிறுமியை மீட்ட போலீசார் அவரை கடத்திசென்ற சூரிய பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ்(வயது 18) என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை சந்திக்கச் சென்ற சூரியபிரகாஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரைகடத்திச் சென்றார்.

    இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகே சிறுமியை மீட்ட போலீசார் அவரை கடத்திசென்ற சூரிய பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×