என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை- போலீஸ் விசாரணை
Byமாலை மலர்21 Jun 2021 3:44 AM GMT (Updated: 21 Jun 2021 3:44 AM GMT)
வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உமர்நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சாயிதா என்ற சைதமா (வயது 40). கணவரை பிரிந்து தனது 18 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு மகள் சென்றிருந்தார். சைதமா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலையில் சைதமாவின் மகள் வீட்டிற்கு வந்த போது அவருடைய தாய் சைதமா நிர்வாண நிலையில், உடலில் பல இடங்களில் காயங்களுடன் இறந்து கிடந்தார். வீட்டில் இருந்த இரும்பு கட்டில் மற்றும் இதரபொருட்கள் உடைபட்டு கிடந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது இரவு சுமார் 11 மணியளவில் ஒருவர் சைதமாவின் வீட்டுக்கு வந்துவிட்டு சென்றதாக அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து சைதமாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சைதமாவின் வீட்டுக்கு வந்து சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்தும் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உமர்நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சாயிதா என்ற சைதமா (வயது 40). கணவரை பிரிந்து தனது 18 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு மகள் சென்றிருந்தார். சைதமா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலையில் சைதமாவின் மகள் வீட்டிற்கு வந்த போது அவருடைய தாய் சைதமா நிர்வாண நிலையில், உடலில் பல இடங்களில் காயங்களுடன் இறந்து கிடந்தார். வீட்டில் இருந்த இரும்பு கட்டில் மற்றும் இதரபொருட்கள் உடைபட்டு கிடந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது இரவு சுமார் 11 மணியளவில் ஒருவர் சைதமாவின் வீட்டுக்கு வந்துவிட்டு சென்றதாக அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து சைதமாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சைதமாவின் வீட்டுக்கு வந்து சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்தும் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X