என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூதலூர், திருவையாறில் கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்20 Jun 2021 5:05 PM GMT (Updated: 20 Jun 2021 5:05 PM GMT)
திருவையாறு தாலுகாவில் அள்ளுர், காருகுடி, வைத்தியநாதன்பேட்டை, பெரமூர், பொன்னாவரை ஆகிய 5 இடங்களில் நடந்த முகாம்களில் 561 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் ஒன்றிய பகுதியில் நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை தொடர்ந்து வில்வராயன்பட்டியில் 165 பேரும், சானூரப்பட்டி முருகன் காலனியில் 138 பேரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். பூதலூர் வட்டாரத்தில் 6 இடங்களில் நடைபெற்ற முகாமில் 462 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதேபோல் திருவையாறு பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் 9 ஊர்களில் 14 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தெருக்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று கிருமி நாசினி தெளித்தனர். திருவையாறு தாலுகாவில் அள்ளுர், காருகுடி, வைத்தியநாதன்பேட்டை, பெரமூர், பொன்னாவரை ஆகிய 5 இடங்களில் நடந்த முகாம்களில் 561 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
வல்லம் வட்டாரத்தில் நேற்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வல்லம் பகுதியில் 843 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X