search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணையில் தண்ணீர் திறந்து வைத்த அமைச்சர் துரைமுருகன்
    X
    அணையில் தண்ணீர் திறந்து வைத்த அமைச்சர் துரைமுருகன்

    மேகதாது அணை குறித்து மத்திய மந்திரியுடன் பேசுவேன் - துரைமுருகன்

    மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதல் மந்திரியின் அறிவிப்பிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    குடியாத்தம்:

    அமைச்சர் துரைமுருகன் மோர்தானா அணையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தி உள்ளார். 

    தமிழகத்தின் அடிப்படை உரிமையை மீட்கவே மேகதாது அணை கட்டுமானம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு மத்திய நீர்வளத்துறை மந்திரியை நேரில் சந்தித்து மேகதாது அணை குறித்து பேச உள்ளேன் என தெரிவித்தார்.
    Next Story
    ×