search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நீடாமங்கலம் வட்டாரத்தில் 26 பேருக்கு கொரோனா

    நீடாமங்கலம் வட்டாரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் சுகாதார பணிகளில் ஈடுபட்டனர்.
    நீடாமங்கலம்:

    நீடாமங்கலம் வட்டாரத்தில் நேற்று ஒரே நாளில் பெண்கள் உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தகவல் அறிந்த வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலெட்சுமி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் தொற்று ஏற்பட்டவர்களை திருவாரூர், மன்னார்குடி, வலங்கைமான்,அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    தொற்று ஏற்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் சுகாதார பணிகளில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×