search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பலி 365 ஆக உயர்வு

    நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்து உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 363 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த 56 வயது நபர் மற்றும் ராசிபுரம் ராம்நகரை சேர்ந்த 61 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்து உள்ளது.
    Next Story
    ×