என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வல்லம் பகுதியில் ஒரே நாளில் 51 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்12 Jun 2021 9:48 AM GMT (Updated: 12 Jun 2021 9:48 AM GMT)
கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகளில் தீவிரமாக சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் குழு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
வல்லம்:
வல்லம் பகுதியில் நேற்று ஒரே நாளில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வல்லம் வட்டார சுகாதார அலுவலர் (பொ) டாக்டர் அகிலன், சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேலு உள்ளிட்ட அலுவலர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்ட 51 பேரில், லேசான அறிகுறி இருந்த 30 பேருக்கு வீட்டு தனிமையில் இருக்க அனுமதி வழங்கப்பட்டது. 16 பேரை வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
நோய் தொற்று அதிகம் உள்ள 5 பேரை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகளில் தீவிரமாக சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் குழு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X