search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்ட்
    X
    சஸ்பெண்ட்

    நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சஸ்பெண்டு

    நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக இருக்கும் சார்லசை சஸ்பெண்டு செய்து கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டார்.

    கோவை:

    நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் சார்லஸ்.

    இவர் இதற்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் பணியாற்றினார்.

    அப்போது பெண் போலீஸ் ஒருவரிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸ், உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்பேரில் சார்லஸ் மீதான பாலியல் புகார் விசாரிக்கப்பட்டது.

    புகாரின் அடிப்படையில் தவறுக்கான முகாந்திரம் இருப்பதால் தற்போது நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக இருக்கும் சார்லசை சஸ்பெண்டு செய்து கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டார். இந்த சஸ்பெண்டு உத்தரவு கோவை டி.ஐ.ஜி. வாயிலாக நீலகிரி மாவட்ட போலீஸ்சூப்பிரண்டுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் சஸ்பெண்டு உத்தரவை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சார்லசிடம் வழங்கினார்.

    மேலும் தற்போது பணியில் இருக்கும் நீலகிரி மாவட்டத்திலேயே சார்லஸ் தங்கியிருக்க வேண்டும் எனவும், அரசு அனுமதியில்லாமல் வேறு எங்கும் செல்ல கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    சஸ்பெண்டு செய்யப்பட்ட சார்லஸ் கோவை, பொள்ளாச்சி, பவானி உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றி உள்ளார்.

    Next Story
    ×