என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சஸ்பெண்டு
கோவை:
நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் சார்லஸ்.
இவர் இதற்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் பணியாற்றினார்.
அப்போது பெண் போலீஸ் ஒருவரிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸ், உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்பேரில் சார்லஸ் மீதான பாலியல் புகார் விசாரிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் தவறுக்கான முகாந்திரம் இருப்பதால் தற்போது நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக இருக்கும் சார்லசை சஸ்பெண்டு செய்து கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டார். இந்த சஸ்பெண்டு உத்தரவு கோவை டி.ஐ.ஜி. வாயிலாக நீலகிரி மாவட்ட போலீஸ்சூப்பிரண்டுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் சஸ்பெண்டு உத்தரவை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சார்லசிடம் வழங்கினார்.
மேலும் தற்போது பணியில் இருக்கும் நீலகிரி மாவட்டத்திலேயே சார்லஸ் தங்கியிருக்க வேண்டும் எனவும், அரசு அனுமதியில்லாமல் வேறு எங்கும் செல்ல கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சஸ்பெண்டு செய்யப்பட்ட சார்லஸ் கோவை, பொள்ளாச்சி, பவானி உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்