search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சோளிங்கரில் சாராயம் விற்ற 2 பேர் கைது

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் சாரயம் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த பழையபாளையம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 55), அதே பகுதியை சேர்ந்த பழனி (40). இவர்கள் இருவரும் சோளிங்கர் பஸ் நிலையம் பகுதியில் சாராயம் விற்பதாக சோளிங்கர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் ராஜ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்த போது முருகனும், பழனியும் சாராயம் விற்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×