என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேஷன் கடைகளில் ரூ.2000 முதல் தவணை தொகையை 2.53 லட்சம் பேர் பெறவில்லை
Byமாலை மலர்11 Jun 2021 4:02 AM GMT (Updated: 11 Jun 2021 10:29 AM GMT)
விடுபட்டவர்களுக்கு ரேஷன் கடைகளில் முதல் தவணை நிவாரண தொகை வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள 2 கோடியே 9 லட்சத்து 59 ஆயிரத்து 349 ரேஷன் அட்டைகளுக்கு கொரோனா முதல் தவணை நிவாரண தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி கடந்த மே மாதம் 15-ந்தேதி தொடங்கியது.
மே மாத இறுதி வரையில் சுமார் 4 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் கொரோனா நிவாரண தொகை பெறாமல் இருந்தனர்.
இதையடுத்து விடுபட்டவர்களுக்கு முதல் தவணை நிவாரண தொகை ரேஷன் கடைகளில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 9-ந்தேதி வரை 2 கோடியே 7 லட்சத்து 5 ஆயிரத்து 943 ரேஷன் அட்டைதாரர்கள் முதல் நிவாரண தொகையை பெற்றுள்ளனர். இது 98.79 சதவீதம் ஆகும்.
இன்னும் 2 லட்சத்து 53 ஆயிரத்து 406 ரேஷன் அட்டைதாரர்கள் இதுவரை முதல் தவணை நிவாரண தொகையை பெறவில்லை. அதிகபட்சமாக தென்சென்னை மாவட்டத்தில் 40 ஆயிரத்து 583 ரேஷன் அட்டைதாரர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 807 ரேஷன் அட்டைதாரர்களும் முதல் தவணை நிவாரண தொகையை பெறவில்லை.
விடுபட்டவர்களுக்கு ரேஷன் கடைகளில் முதல் தவணை நிவாரண தொகை வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 2 கோடியே 9 லட்சத்து 59 ஆயிரத்து 349 ரேஷன் அட்டைகளுக்கு கொரோனா முதல் தவணை நிவாரண தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி கடந்த மே மாதம் 15-ந்தேதி தொடங்கியது.
மே மாத இறுதி வரையில் சுமார் 4 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் கொரோனா நிவாரண தொகை பெறாமல் இருந்தனர்.
இந்த நிலையில் முதல் தவணை நிவாரண தொகையை பெறாதவர்கள் ஜூன் மாதமும் நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையும் படியுங்கள்... ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ள 14 வகை மளிகை பொருட்களுக்கு நாளை முதல் டோக்கன்
இன்னும் 2 லட்சத்து 53 ஆயிரத்து 406 ரேஷன் அட்டைதாரர்கள் இதுவரை முதல் தவணை நிவாரண தொகையை பெறவில்லை. அதிகபட்சமாக தென்சென்னை மாவட்டத்தில் 40 ஆயிரத்து 583 ரேஷன் அட்டைதாரர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 807 ரேஷன் அட்டைதாரர்களும் முதல் தவணை நிவாரண தொகையை பெறவில்லை.
விடுபட்டவர்களுக்கு ரேஷன் கடைகளில் முதல் தவணை நிவாரண தொகை வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X