என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது
Byமாலை மலர்10 Jun 2021 7:33 AM GMT (Updated: 10 Jun 2021 7:33 AM GMT)
தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (11-ந் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி நாளை உருவாகிறது. அது 12-ந் தேதி மேலும் வலுவடைய உள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இல்லை.
அதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்யக்கூடும்.
மேலும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (11-ந் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி நாளை உருவாகிறது. அது 12-ந் தேதி மேலும் வலுவடைய உள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இல்லை.
இதன் காரணமாக அந்தமான் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும் மத்திய வங்க கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
அதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்யக்கூடும்.
மேலும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X